Wednesday, April 1, 2026

ராஜயோகத்தின் வேர்கள் (BEYOND THE MIND)

பதஞ்சலி மஹரிஷியின் தியான அறிவியலும் சில புரிதல்களும்

 

 "இறைவன் மீது ஆழமாக அன்பு செலுத்துவதே பக்தி யோகம். அந்த அன்பே ஆழமான அனுபவமாக மாறுவதுதான் ராஜயோகம்."

 


  மற்ற யோகங்கள் அவற்றின் செயல்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன (எ.கா: உடல் உழைப்பால் கர்ம யோகம், அறிவால் ஞான யோகம்). 

    ஆனால், ராஜயோகத்திற்கு மட்டும் 'ராஜ' என்ற சொல் ஒரு  உயர்ந்த தனித்துவத்தை அளிக்கிறது. மனமே ஒரு மனிதனின் பேரரசு; அதை ஆளும் வித்தையைக் கற்பிப்பதால் இது யோகங்களின் அரசனாகத் திகழ்கிறது.

 

பக்தி vs தியானம்: ஓர் ஆய்வு

      பக்தி என்பது ஒரு 'அன்பு நிலை' என்றால், அந்த அன்பைத் தனக்குள்ளேயே அனுபவமாக மாற்றிக் கொள்ளும் ஒரு தீவிர ஆய்வு நிலைப் பயிற்சியே தியானம்.

 இன்று 'தியானம்' என்ற சொல் உலகெங்கும் பிரபலம் அடைந்திருந்தாலும், அதன் உண்மையான அடித்தளம் பதஞ்சலி மஹரிஷி வழங்கிய யோக நெறியில்தான் உள்ளது.

 

 🪷🪷🪷

ஆதி குருக்களின் பங்களிப்பு:

       தியான நுட்பங்கள் இன்று பல புதிய வடிவங்களில் போதிக்கப்பட்டாலும், இவை அனைத்தும் பிரம்ம சூத்திரத்தைத் தழுவி பதஞ்சலி மஹரிஷி வடிவமைத்த யோகக் கலையிலிருந்தே எடுக்கப்பட்டவை.

  வடமொழியில் பதஞ்சலி மஹரிஷியும், தமிழில் திருமூலரும் இதனை உலகிற்குச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளனர்.


🪷🪷

பயணத்தில் ஏற்படும் தடைகள்

இந்த ஆன்மீகப் பாதையில் நீண்ட காலம் பயணம் செய்பவர்களுக்குத் தேக்கம், சந்தேகம், சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பு என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

 

🪷🪷

 இத்தகைய தடைகளை நீக்கும் வழிகளும் பதஞ்சலி யோக சூத்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளன.

  

பதஞ்சலி மஹரிஷியின் நான்கு பாதங்கள் (Chapters):

யோகத்தின் முழுமையான பாடத்திட்டத்தை நான்கு நிலைகளாக அவர் பிரித்துள்ளார்:

  

   1. சமாதி பாதம்: மனதின் நிலைகளையும், இறைவனுடன் ஒன்றிணைவதையும் விளக்குகிறது.

 

   2. சாதனா பாதம்: அந்த நிலையை அடையத் தேவையான உத்திகளையும் பயிற்சிகளையும் கூறுகிறது.

 

   3. விபூதி பாதம்: பயிற்சிகளின் மூலம் கிடைக்கும் ஆற்றல்கள் மற்றும் அதன் விளைவுகளை விளக்குகிறது.

 

   4. கைவல்ய பாதம்: இந்த ஆற்றல்கள் மீது பற்று கொள்ளாமல், தடைகளைத் தாண்டி முழுமையான விடுதலை (கைவல்யம்) அடைவதை விளக்கி நிறைவு செய்கிறது.

 

 

முடிவுரை:

     நாம் யோகத்தின் பல பரிமாணங்களைப் புரிந்துகொள்ள பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்திரங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். இதை நாம் பயிலும்போது மென்மேலும் தெளிவு பிறந்து, உண்மையான தியான வாழ்க்கை நமக்குப் வசப்படும். தியான வாழ்வைச் சித்தியாக்க விரும்புவோர் எவரும் இந்தப் பாடத்திட்டத்தை வாசிப்பது அவர்களுக்கு ஒரு நல்வழிகாட்டியாக அமையும்

 

ஆக்கமும் அறிவும் பிரபஞ்ச வடிவில் குருவே துணை 

மாதங்கியான் சிவ .உதயகுமார்

 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment