Saturday, June 20, 2009

ஓம் மந்திரம்

ஓம் மந்திரம் அ - தூல உடலையும், தூல பிரபஞ்சத்தையும்

உ - சூட்சும உடலையும் , சூட்சும உலகையும்

ம - காரண அதிசூட்சும உடலையும் , சூட்சும உலகையும் வெளிபடுத்துகின்றது.


இம் மூன்றும் இணையும் போது ஓங்கார மந்திரமாய் உலக உற்பத்தியின் அடிப்படை யினையும் இறையையும் அடையும் அறியும் விழிப்பை உணர்வில் உருவாக்குகிறது.


உடலியலின் ஜீவ சக்தியையும் உயிரியலின் பிராண சக்தியையும் மனவியலின் ஞான யுக்தியால் இணைக்கும் யோக சக்தியை நமக்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியாவார் .


மனதிற்கு யோக சூத்திரமும் (அட்டாங்க யோக நெறி)

வாக்கிற்கு சப்தத்திற்கு ஒலி இலக்கணமாய் வியாகரண பாஷ்யமும் ,

உடலுக்கு சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திர நூலையும் (திரிகரண சுத்தி)

அருளியுள்ளார்.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment