Showing posts with label பல்சுவை. Show all posts
Showing posts with label பல்சுவை. Show all posts

Friday, February 9, 2024

இறைவன், குரு , சாஸ்திரம் - அது தான் பதஞ்ஜலி யோகம்

    தனது நோக்கம் தனது விருப்பம் தனது இலக்கு தனது எதிர்காலம்  இவற்றையெல்லாம் குறித்து ஒரு மனிதனுக்கு எதிர்மறை சிந்தனைகள் அதிகமாகும் போதும்...

 

Saturday, February 27, 2016

திருமகள் அபிராமியின் யோகாஞ்சலி நிகழச்சி

பெளா்ணமி குருபூஜையில் சத்குருவின் திருவுரு முன்பாக  திருமகள் அபிராமி நிகழ்த்திய யோகாஞ்சலியின் அற்புத வீடியோவை பாருங்கள்
அந்த குழந்தைக்கு நம்முடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்

(வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது )




நிகழ்ச்சி ஏற்பாடு : ஸ்வார்த்தம் சத் சங்கம்

Sunday, December 22, 2013

இவர்களில் நாம் யார் ? (மறை விளக்கும் மனித நிலை)



மதுரை, யோகா, பழங்காநத்தம் , மஹரிஷி, அகத்தியர்


1 ) தீவினைகளை வெட்கமின்றி , கூச்சமின்றி, பயமின்றி  அதன் தீய விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல், அதனை தொழிலாகவே செய்து கொண்டிருப்பவன் தீயவனாகிறான்.

Sunday, August 18, 2013

என்றும் 16, வேண்டும் – 16

என்றும் 16, வேண்டும் –16



swartham sathsangam, pathanjali, patanjali, T.S. krishnan

மிகவும் நல்ல நாள் - இன்று


மிகப்பெரிய வெகுமதி -மன்னிப்பு



மிகவும் வேண்டியது - பணிவு


Thursday, August 15, 2013

இனியொரு விதி செய்வோம் - சாஸ்திரங்களின் கூற்று


                                                               
ஸ்வார்த்தம் சத்சங்கம், T.S. கிருஷ்ணன் , T.S.KRISHNAN


பூர்வ ஜென்மாவில் நாம் செய்த குற்றங்களுக்காக நாம் கஷ்டப்பட வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.  ஆனால் அதற்காக வேறு வழியில்லாமல் மேலும் மேலும் குற்றங்கள் செய்யலாம் என்று பொருள் இல்லை. 

Tuesday, August 13, 2013

ரகு வம்சம் (மூல காரணம் )


ரகு வம்சம் (மூல காரணம் )


ஸ்ரீ ராமர் தோன்றியது  ரகு வம்சத்தில்.
                                       

 சூரிய குலத்தில் தோன்றிய திலீபன் என்ற அரசன் மற்றும் அவன் மனைவி சுதக்ஷீணா என்ற அரச தம்பதிகளுக்கு குழந்தைப் பேறில்லை.

Tuesday, August 23, 2011

மனிதமும் சனாதனமும் - பகுதி 3


 மனிதமும் சனாதனமும்

முக்தி அல்லது விடுதலை என்றால் பௌதீக உணர்வில் இருந்து சுதந்திரம் பெறுவதே ஆகும்.

அந்த உணர்வு என்பது யாது? அவ்வுணர்வு நான் இருக்கிறேன் என்பது. எனில் நான் என்பது யாது? களங்கப்பட்ட நிலையில் நான் காண்பது, துய்ப்பது, யாவும் என்னால் அடையப்படுகிறது என்பதாகும். 

இறைவனின் இந்த பிரபஞ்சத்தில்  உறுப்பான ஜீவர்கள், ஆள்பவனுடன் இணைந்து செயல்படுபவர்களே.

உதாரணமாக ஒரு இயந்திரத்தின் உறுப்பு, அந்த முழு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுகிறது. அது போல இவ்வுடலின் ஒரு அங்கம், இவ்வுடல் முழுவதுடனும் இணைந்து செயல்படுகிறது.

Sunday, August 21, 2011

மனிதமும் சனாதனமும் - பகுதி 2


 மனிதமும் சனாதனமும் - பகுதி 2
உண்மையில் நாம் எல்லோருமே அறியாமைப் புலியால் பின் தொடரப்படுகின்றோம். 

இறைவன் உயிர்களின் மீது கடலினும் மிகு கருணை உடையவராய் இருக்கின்றார். மனித வாழ்வின் லட்சியத்தை பக்குவப்படுத்திக் கொள்ள மனிதனால் நிச்சயம் முடியும்.

கடவுள் என்ற ஆள்பவரும், ஜீவர்கள் என்ற ஆளப்படுபவரும் சுயத்தின் இயற்கைக் கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லவா?.

 அதாவது கர்ம வினைப்படி (சனாதன தர்மத்தின்) அடிப்படையில் இச்செயல்பாடுகளுக்கும் விளைவுகள் இருக்கத்தான் வேண்டும்.  நான் ஆளப்படவில்லை சுதந்திரமானவன் என்று கூறினால் அவன் ஞானமற்றவனே. குறைந்த பட்ச கட்டுப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு விதத்திலும் ஜீவன் ஆளப்படுகிறது.

மனிதமும் சனாதனமும்

மனிதமும் சனாதனமும் 

ஓம் 

ஸ்ரீ குருச் சரண் 

                                                                                  


 மனிதம் என்பது அதிசயங்களும் அற்புதங்களும் கொண்ட ஒரு பேராற்றல் மிக்க அறிவு ஜீவிகளின் பொதுச் சொல்லாகும்.

மனிதம் தவிர்த்த ஏனைய உயிரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட மனிதத்தைப் போலவே ஒத்த வாழ்க்கையை வாழ்கின்றன.

உண்பதில் , உறங்குவதில், உய்வதில், உறவு கொள்வதில் என்று அத்தனை செயல்களிலும் எந்த வித்தியாசமும் இன்றி அவைகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. 

ஆம் , நமக்குப் பசிக்கிறது 

. அவைகளுக்கும் பசிக்கிறது . நமக்கும்  உடற்பசி உண்டு . 

 அவைகளுக்கும் உண்டு . நாமும்  வாழ்கின்றோம்.  அவைகளும் வாழ்கின்றன. நமக்கு உறக்கம் வாழ்கின்றதோ இல்லையோ பெரும்பாலும் அவைகள் கவலையின்றி உறங்குகின்றன. ஏன் மனிதன் மட்டும் சிறப்புள்ளவனாக கருதப் படுகின்றான். பிற உயிரினங்களில் இருந்து  எது நமக்கு சிறப்புத் தன்மையினை தருவதாக உள்ளது. 

அது ஆறாவது அறிவு என்ற ஒன்றா ?

Saturday, March 27, 2010

ஆஹா யோகா

                     ஆஹா யோகா
                                                              

மருந்தில்லா மருத்துவம் யோகக் கலை.
அது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.
பதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம்.
அந்தோ பரிதாப நிலை.

Friday, March 12, 2010

எது ஆன்மீகம் ?

 
-->
                   


ஆன்மீகம் ஒரு தத்துவச் சொல்


அன்பின் ஆழம் . அன்பின் நெறி , அன்பின் வழி , அன்பின் உந்துதல் , அன்பின் செயல் , அன்புமயம் , மனமற்ற நிலை யோக பயிற்சியின் விளக்கம் .

TRANSLATE

Click to go to top
Click to comment