Saturday, October 29, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 9 )


30 .திருமணிமாடக்கோவில் 

(திருநாங்கூர்)



பெருமாள்               : நந்தா விளக்குப் பெருமாள் –நாராயணன் . 

                 வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே   திருமுக மண்டலம் 


தாயார்                       : புண்டரீக வல்லி 


விமானம்                 : ப்ரணவ விமானம்


தீர்த்தம்                   : இந்திர, ருத்ர, புஷ்கரிணி


ப்ரத்யக்ஷம்           :  ருத்ரர்கள், இந்திரன் , மதங்கர்


மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 11 பாசுரங்கள்)


தை அமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது.

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 8 )


24. காழிச்சீராம  விண்ணகரம்
[ சீர்காழி தாடாளன் கோவில் ]

பெருமாள்               : தாடாளன் – திருவிக்கரமமூர்த்தி நின்ற திருக்கோலம்,
                                                             கிழக்கே   திருமுக மண்டலம் 

தாயார்                       : மட்ட விழுங்குழலி – லோக நாயகி

விமானம்                 : புஷ்கலாவர்த்தக விமானம் 

தீர்த்தம்                   : சக்ர தீர்த்தம் , சங்க புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்           : அஷ்டகோண மஹரிஷி 

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]

திருமங்கையார் ஞானசம்பந்தரை வாதில் வென்று நாலுகவிப் பெருமாள் என்ற விருதைப் பெற்ற இடம் 

சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகளில் சென்று கோயில் வாசலில் இறங்கிக்கொள்ளலாம் 

Friday, October 28, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 7 )

16  திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில் )

பெருமாள்             :   ஒப்பிலியப்பன் 
                                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                    :   பூமி தேவி நாச்சியார் 

விமானம்              :  விஷ்ணு, சுத்தானந்த விமானம் 

தீர்த்தம்                  : அஹோராத்ர புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்          :  மார்க்கண்டேயர், கருடன் காவேரி, தர்ம தேவதை 

மங்களாசனம்    :  பொய்கையார் , பேயார், நம்மாழ்வார் ,
                                     திருமங்கை ஆழ்வார்         ( 47  பாசுரங்கள் )

கும்பகோணத்திலிருந்து 7  கி.மீ தொலைவில் உள்ள பேருந்து வசதி மிக்க தலம்.


Tuesday, October 4, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 6 )


13. தலைச்சங்க நாண்மதியம் [தலச்சங்காடு ]

பெருமாள்                  : நாண் தியப் பெருமாள் – வெண்சுடர்ப் பெருமாள்
                                              நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுருக மண்டலம் 

தாயார்                       : தலைச்சங்க நாச்சியார் – செங்கமலவல்லி

Thursday, September 29, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 5 )


10. திருவழுந்தூர்
[தேரழுந்தூர்]


பெருமாள்                                : ஆமருவியப்பன் – தேவாதிராஜன்
                                          நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                      : செங்கமலவல்லி 

TRANSLATE

Welcome To Pathanjali Website