Showing posts with label சைவ உணவா. Show all posts
Showing posts with label சைவ உணவா. Show all posts

Friday, May 28, 2010

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

அதிகாரப்பூர்வ மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத. புத்த, சமண, சீக்கிய மதங்கள் எதுவுமே அசைவ உணவினை அனுமதிக்காததோடு அங்கீகரிக்கவும் இல்லை.

இயேசு கிறிஸ்து.
                                                                               
இயேசுநாதர் அன்பு, கருணையினை அதிகம் உபதேசித்தார்.

மனித உருவில் இறைவனான அவர் சம்பந்தப்பட்ட திரு உருவ படங்களில் அவரது கையில் உள்ள ஆடு எவ்வளவு அன்புடன் அரவணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் அன்பு கனிந்த பார்வையிலும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அத்தகையவர் அந்த ஆட்டினை கொன்று தின்னும் செயலை போதித்திருப்பாரா அல்லது கண்டித்திருப்பாரா?

நிச்சயமாக அன்பின் மறு உருவத்தை அவர் மூலம்காணும் அவர் கோட்பாடுகளின் வழி நடக்கும் மக்கள் அசைவத்தை தவிர்த்து ஆக வேண்டும்.
இயேசு ஒரு போதும் மாமிசம் உண்ணவில்லை.

பல கிறிஸ்தவர்களுக்கு அசைவம் உண்பதை தவிர்ப்பதில் இடையூறாக இருப்பது கிறிஸ்து மாமிசம் உண்டார் என்ற தவறான நம்பிக்கை.

ஆனால் புதிய ஏற்பாட்டின் படி கிரேக்க மொழி மூலத்தை சற்று ஆழ்ந்து கவனிக்கும்போது உணவு அல்லது உண்ணுதல் என்று பொருட்படும் வார்த்தைகளும் மற்றும் டீராஃபி (TROPHE) பிராம் (BROME) என்ற வார்த்தைகளுமே தவறாக மாமிசம் என்னும் பொருள்படும் மீட் (MEAT) என்ற ஆங்கில வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் படி பல இடங்களில் உண்ண என்று பொருள் படும் பாகோ ((BHAGO) கிரேக்க வார்த்தை மாமிசம் என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் மாமிசத்தை குறிக்கும் கிரேக்க வார்த்தை கிரியஸ் (KRIYAS) என்பதாகும். அந்த வார்த்தை கிறிஸ்துவுடன் தொடர்புடைய எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு மாமிசம் உண்டதற்கு எந்த அத்தாட்சியமும் இல்லை.

மேலும் யூதர்களின் நசரையேர் பிரிவினர் இன்னும் தாவர உணவை உண்பவர்களாகவே உள்ளனர். ஏசுவும் தன்னை நசரையேன் என்று பிரகடனப்படுத்தியுள்ள அவர் அசைவ உணவை உண்ணாததை உறுதிப்படுத்துகிறது.

அசைவம் உண்பதை நிராகரிக்கும் சான்றுகள்.

1) சாம்ஸ் (PSALMS)) 145.9-ல் இறைவன் எல்லோருக்கும் நல்லவர் அவருடைய எல்லா படைப்புகளிலும் இரக்கம் உடையவர் என்று குறிப்பிடபட்டுள்ளது


2) ஏலாஹில் (EZEKIEL) 47.12 ல் உன்னுடைய உணவாக பழங்களாகட்டும், மருந்தாக விதைகளாகட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3) இசையா (ISAIAH ) 1ஃ11ல் நான் எரிக்கப்பட்ட ஆடுகளாலும் கொல்லப்பட்ட விலங்குகளின் கொழுப்பாலும் நிரப்பபட்டுள்ளேன். நான் எருது மற்றும் ஆடுகளின் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் பிரார்த்தனைகளை நான் ஏற்பதில்லை, ஏனெனில் உன்னுடைய கரங்கள் இரத்தம் பழந்ததாக உள்ளது. என்றும் 66:3ல் ஒரு எருதைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு சமமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


4) எக்ஸோடாஸ் (EXODUS ) 20:13ல் நீ கொல்லாதிருப்பாயாக என்று குறிப்பிடப்படபடுகிறது.

(நன்றி - ISCON ULAGAM)



புத்தர்


மற்ற உயிர்களுக்கு பயம் உண்டாகாமல் இருக்க என் சீடர்கள் எவரும் மாமிசம் உண்ணலாகாது.

புத்திசாலிகளின் உணவு சாதுக்களின் உணவாக இருக்கட்டும். மாமிசம் கலவாதிருக்கட்டும். நான் புலாலை உண்பதை எவ்விதத்தும் எந்நிலையிலும். எந்த சூழலிலும் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

தம்மப்பாதாவில் யாரொருவர் சொந்த மகிழ்ச்சியினை விரும்புகிறார்களோ இவர்களை போலவே மகிழ்ச்சியினை நாடும் மற்ற உயிர்களை தண்டிக்கவோ கொல்லவோ செய்தால் இப்பிறவிக்கு பின் மகிழ்ச்சியினை அடைவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமண மதக்கோட்பாடுகள்

108 வகையான ஹிம்சைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹிம்சையே சமண மதத்தின் அடிப்படைக்கோட்பாடு மற்ற உயிர்களுக்கு கேடு செய்ய சிந்தனை, சொல், செயல் இவற்றால் ஈடுபடுவதும் பாவமாகிறது, அப்படி இருக்கையில் மாமிசத்திற்காக ஓர் உயிரைக்கொல்வது பற்றி பேசுவதற்கே இடமில்லை.



இஸ்லாமிய மதம்
குர்-ஆன் சுரா 36, பதங்கள் 33.34.35-ல்

அவர்களுக்கு வறண்ட பூமி அடையாளமாக அளிக்கப்பட்டது.

நாங்கள் அதை உயிர்ப்பித்தோம். அவர்கள் உண்ணும் வண்ணம் அதிலிருந்து தானியங்களை உண்டாக்கினோம்.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை தோட்டங்களை அங்கு உருவாக்கினோம். அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களை உண்ணட்டும்,

பின் அவர்கள் நன்றி சொல்ல மாட்டார்களா? என்று கூறப்பட்டுள்ளது.
 
(இங்கே தாவர உணவினையே குறிப்பிட்டிருப்பதால் அசைவ உணவை குறிப்பிடபடவில்லை என்பது தெரிகிறது)
இறைத்தூதர் முகமது நபி விலங்குகளை ஊனப்படுத்தாதே என்றும் தன்னை விட கீழ்ப்பட்ட உயிர்களுக்கு கருணை காட்டுபவர் தனக்கே கருணை காட்டுகிறார் என்று கூறியள்ளார்.

குர்-ஆன் சுரா 6 பதம் 38ல் 

இந்த பூமியில் உள்ள மிருகங்களும் இரண்டு இறக்கைகளுடன் வானில் பறக்கும் பறவைகளும் உனக்கு மற்ற மக்களை போன்றவர்களே என்று குறிப்பிடப்படுகிறது.


அசைவத்தினை தவிர்த்த சூஃபி சாதுக்கள்

தூய்மை, துறவு, இரக்கம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தனர். மேலும் அசைவம் முழுதும் தவிர்த்த எளிமையான உணவினை மட்டுமே உண்டனர். இவர்களில் அன்பு, .கருணை, ஒழுக்கம், தவநெறி. கொண்ட கீழ்க்கண்ட பெரியோர்கள்

1) ஸேக் இஸ்மாயில்

2) க்வாஜா மைதீன் சிஸ்டி

3) ஹசரத் நிசாமுதீன் அவுலியா

4) பூ அலி கொலண்டர்

5) ஸா இனையட்

6) மீர் தட்

7) ஸா அப்துல் கரீம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவா.

நம் முன்னாள் இந்தியக்குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் கூட அசைவம் தவிர்த்த சைவ உணவாளரே என்பதும் குறிப்பிடதக்கது.




பத்ம புராணம்.

பதங்கள் 3, 31, .25, 28 மற்ற உயிர்களை துன்பபடுத்தும் மனிதர்கள் வேதங்களை ஓதினாலும் தவறுகள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும். சொர்க்கத்திற்கு போவதில்லை.

ஏனெனில் அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம் அதுவே பெரிய தவம். அதுவே பெரிய தானம். இவ்வாறு முனிவர்கள் கூறியுள்ளனர்.

கர்மா நியதிக் கொள்கையின்படி சிறு உயிரோ அல்லது பெரிய உயிரோ எதுவாயினும் அதை அறிந்தோ. அறியாமலோ கொல்பவர்கள் அவைகளாலயே ஒரு நாள் கொல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.

பகவத் கீதை-

பதம் 9ஃ26ல் 

பகவான் கிருஷ்ணர் ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும். இலையோ. பழமோ, பூவோ அல்லது நீரோ அளித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். தாவர உணவையே அளிக்குமாறு கூறினாரே தவிர எந்த இடத்திலும் தனக்கு அசைவ உணவினை அளிக்குமாறு கூறவில்லை.

ஸ்ரீ மத் பாகவதம்.

பதம் 1ஃ17ஃ38ல் கலி என்னும் பாவ புருசன் குடியிருக்கும் நான்கு இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால் கலியின் கேடுகள் அவர்களை அடைகிறது.


மனுசம்ஹிதை.
5ஃ51
மிருக வதையினை அனுமதிப்பவர்கள். கொல்பவர். கூறுபோடுபவர். வாங்குபவர். விற்பவர். சமைப்பவர். பரிமாறுபவர் உண்பவர் ஆகிய அனைவரும் கொன்றவர்களாக கருதப்படுவர்.

திருக்குறள்
திருவள்ளுவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள திருக்குறள் என்ற உலகம் முழுவதும் தமிழ்மறை என ஒத்துக்கொள்ளப்பட்ட அந்த நூலில் புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரம் முழுவதும் புலால் உண்பதைச் சாடி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அதிகார எண் 26

251)
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்
252)
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பார்க்கு

253)
படைகொண்டார் நெஞ்சம்போது நன்று ஊக்கானது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்


254)
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்
255)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணுத்தல் செய்யாது அளறு
256)
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்

257)
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண் அது உணர்வர்ப்பெறின்



258)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

259)
அவிசொரிந்து ஆயிரம் வெட்டலின் ஒன்றன்
உயிர்செருத்து உண்ணாமை நன்று
260)
கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

வள்ளுவரின் வரிசையில் எத்தனையோ ஈரடிச் செய்யுள்கள் தந்த எத்தனையோ மென் மக்களுள் ஒருவரான அவ்வை முனி தனது கொன்றை வேந்தன் நீதி நூலில் குறள் எண் 58. 63 இரண்ழலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

58) நோன்பென்பதுவே கொன்றுதின் னாமை.

பொருள்:
ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியினை தின்னாதிருப்பதே புண்ணியம் பெருக்கும் சிறந்த விரதமாகும்.

63) புலையும், கொலையும் களவும் தவிர்

இழிவான இறைச்சி உண்பதையும் (ஐந்து மா பாதகச்செயல்களுள்) மாபாதகச்செயலான கொலை செய்வதையும் நெஞ்சத்தைக் கெடுக்கும் வஞ்சகச் செயலாகிய திருட்டையும் கைக்கொள்ளாதே.

இதுபோன்று உலகின் மறை அத்தனையிலும் உணர்த்தும் ஒரே நெறியாகிய கொல்லாமையினை பற்றி மாபாதகச்செயல்களுள் மிகப்பெரியதென இதனையே வற்யுறுத்தி மக்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆன்மீக அடிப்படை செய்திகளும் உணர்வுக்கோட்பாட்ழல் உறுதியாய்ப் பற்றிடும் செய்திகளும் உடல் விஞ்ஞான அணுக் கோட்பாட்டின்படி    ஆதாரச்செய்திகளாயும் விரிந்த வண்ணம் புலால் மறுப்புக்கொள்கை தொடர்ந்து வர இருப்பது இறைவனுக்குச் செய்யும் ஒரு தொண்டாய் ஸ்வார்த்தம் சத் சங்கம் எண்ணுவதாய் அமையும் என்பதே இப்போதைய இறுதிச்செய்தி.

Friday, May 14, 2010

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ? பகுதி - 2

அசைவ உணவு உண்ணும் பிராணிகளின் உடல் அமைப்பு

பற்கள் -

மாமிச உணவினை கிழித்து தின்னும் வகையில் அமைந்துள்ள நெடிய கூரிய கோரைப்பற்கள் , இதற்கு உதவி செய்யும் வகையில் அவைகளின் கைகால்களில் அமைந்துள்ள வலுவான கூரிய நகங்கள்.

உமிழ்நீர் -

அதிக அமில சக்தியினை கொண்டதாக கொண்டதாக இருப்பதோடு அதிகம் சுரப்பதாகவும் உள்ளது.



நீர் அருந்துதல் -

நாக்குகளால் நக்கிக் குடிக்கும் வகையில் அமைந்துள்ள நீண்ட நாக்கு.



கண்கள் -

தனது இரையினை இரவில் மற்றும் இருளிலும் தேடிப்பிடிக்கும் வசதி உடைய கூரிய பார்வை மற்றும் சக்தி பெற்றதாகயிருக்கிறது.

கல்லீரல், பித்தப்பை , சிறுநீரகங்கள், இரைப்பை ஆகிய முக்கிய உறுப்புகள் அளவில் பெரியதாகவும், கழிவு நீக்கும் பணி விரைவாகவும் , அதிகமாகவும் நடைபெறும் வண்ணம் அமையப் பெற்றது.


குடல் அமைப்பு -

மாமிச பட்சிணியின் உடல் நீளத்தைப் போல் மூன்று மடங்கு மட்டுமே நீளம் உடையதாக இருக்கிறது .

இதனால் அவைகள் உண்ணும் உணவுகள் கழிவுகள் வேகமாக விரைவாக வெளியேறி குடலில் தங்க வாய்ப்பில்லாமல் செய்கிறது.

இது போன்ற எத்தனையோ மாறுபட்ட குடல் அமைப்புகளை அசைவ உணவிற்கேன்றே அமையப் பெற்றிருத்தல் ஏன் என்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மனிதன் மாமிச உணவினை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க உடல் அமைப்பினை பெற்றிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.


பொதுவான தகவல்கள்

மனிதர்களை அவர்கள் நடமாட்டம் மற்றும் வெளித் தோற்றத்தில் அவர்களுக்கு இருக்கும் சாதாரண நோய் முதல் கடுமையான நோய்கள் வரை (தொற்று ஏற்படும் நோய்கள்) கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால் மாமிசத்திற்கு பயன்படும் ஆடு, மாடு, கோழி, மற்றும் சில பறவையினங்கள் அவைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் , கல்லீரல் நோய், குடல் நோய், சுவாச நோய், பெரும்பான்மையான தொற்றுநோய்கள் ஆகியவைகளால் அவைகள் பாதிப்படைந்திருக்கின்றன என்பதை வெளிப்படையாகப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

ஆகவே மேற்குறித்தவைகளின் மாமிசங்களை புசிப்பதால் நமக்கு ஏற்படும் நோய் பற்றி சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.

மேலும் அந்த விலங்கினங்களின் வெட்டப்பட்ட சதைப்பகுதி அழுகுதல் (கெட்டுப் போகுதல்) புறச் சூழலால் காற்று, நீர், ஆயுதம் , பயன்படுத்தும் கைகள், இடம் முதலியன மாசு உடையதாகவே 99 விழுக்காடு இருந்து வருகின்றது.

இதனால் நோய்த் தொற்று கிருமிகள், மாமிசத்தில் பரவி அதை உண்பவர்களை ( எவ்வளவு கொதிக்க வைத்தாலும் வேக வைத்தாலும் ) நீங்காத நிலையில் மனித உடல் நோய்க்கு காரணமாகிறது.


மிருகங்களை உணவிற்காக அவை கொல்லப் படும்போது அவற்றிற்கு இறப்பு பயம் ஏற்பட்டு வேதனையால் அவற்றின் உடலில் அட்ரினலின் என்ற விஷ நீர்ச்சுரப்பு அதிகம் சுரந்து மாமிசத்திலும், உடல் உறுப்புகளிலும் கலந்து விடுவதால் அந்த விஷம் அதை உண்பவர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

இதனால் ஏற்படும் நோய் (பாதிப்பு ) என்னென்ன என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞான உலகம் அதிகம் வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.

மாமிசத்திற்கு பயன்படும் மிருகங்களை அவற்றிற்கு ஏற்படும் மாமிசத்திற்கு பயன்படும் மிருகங்களை அவற்றிற்கு அளிக்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் , எடை கூட்டுவதற்கு மருந்துகள் , எடை கூட்டுவதற்கு அளிக்கப் படும் மருந்துங்கள் விரைவு வளர்ச்சிக்காக கொடுக்கப் படும் மருந்துகள், என்னென்ன ?

அவைகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவையா இல்லையா என மனிதனுக்கு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (குறிப்பாக) பெனிசிலீன் போன்ற நூற்றுக்கணக்கான வகை மருந்துகளால் ஏற்படும் தீய (விளைவுகள்) பற்றி மனித குலத்திற்கு தெரிவித்திருக்கின்றனரா ?


ஒரு வேலை அறிவித்திருந்தும் மக்கள் உணராமல் இருக்கின்றார்களா????????


உலகம் முழுவதும் உள்ள அசைவ உணவுப் பிரியர்களுக்கு இதற்கான விடையினை அளிக்க யார் முன்வருவார்கள்.

மேலும் ஆடு, மாடு மற்றும் கறிக் கோழிகளின் உடலில்
டைதில்ஸ்டில் பெஸ்ட்ரேல் ஆர்சேனிக் , 

சோடியம் நைட்ரேட்,

போன்ற மனித உடலுக்கு பெரும் சீர்கேட்டினை விளைவிக்கும் விஷங்கள் இருப்பதை உறுதி செய்து அவற்றை அசைவ உணவுப் பிரியர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு சம்மந்தப் பட்ட துறைகள், பொது அறிக்கை உலகளாவிய நிலையில் வெளியிடுவது மனித குலத்திற்கு செய்யும் பெரும் பேருதவியும் கடமையும் ஆகும்.


இன்றைய மனிதர்களின் எதிர்பாராத திடீரென வரும் உயிரிழப்பிற்கு காரணமான ( இரத்தக் கொதிப்பு நோய்) இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் ( LD ) அளவு அதிகமாதலே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்புச் சத்து அதிகம் காரணாமாக
இரத்தக் குழாய் அடைப்பு,
இதயத்தின் செயல்பாடு முடக்கம்,
மூளை இரத்தக் குழாய்கள் அடைப்பினால் பாதிப்பு,

இவற்றால் வரும் ஏனைய அனைத்து முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு முன்னறிவிப்பின்றி திடீரென மனித உயிர்களை குடிக்கின்றன.

அந்த வகையில் கொழுப்பில்லாத உணவு அல்லது கெட்ட கொழுப்பினை குறைக்கும் உணவு அவசியம் ஆகிறது.



இதற்கு மாமிச உணவு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லாமல் எதிர்மறையான பலன்களையே தருவதாக இருப்பது அனைவரும் ( மருத்துவர் உட்பட) அறிந்ததே.

அதிக கொழுப்பைத் தரும் அசைவ அசைவ உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் பொறித்த உணவு என்று நீண்ட பட்டியலை நாம் நன்கு உணர்ந்திருந்தும் அந்த எச்சரிக்கைகளை உணராது சுவைக்கு எனவும் , உடல் மிகைக்கு எனவும் அதிக கொழுப்பு தருகின்ற உணவுகளையே உட்கொள்கின்றோம்.

இதனால் மேலே கூறிய மாரடைப்பு, போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் சிறுவயதினரையும் விட்டு வைக்காமல் மரணத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த மாரடைப்பு மற்றும் கூறிய அறிவுக் குறைவு எதையும் தீர்மானிக்க முடியாத பொறுமையற்ற பரபரப்பான , பயம் மற்றும் சோர்வு தருகின்ற நிலைக்கு தள்ளக் கூடிய வகைவகையான வாழ்வின் நற்பண்புகள் அற்ற துன்பியல் முடிவுகளை தரக் கூடியதுமான அசைவ உணவுகளை நாம் ஏன் ஒதுக்கக் கூடாது அல்லது தவிர்க்கக் கூடாது.?

நம் மீது நமக்கு , சுருங்கக் கூறினால் நம் வாழ் நாட்களை நாமே குறைத்துக் கொள்ளுதல் நம் மீது நமக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

இங்கே   இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சைவ, அசைவ உணவுகளின் சத்துக்களின் விவரப் பட்டியல் இணைக்கப் பட்டுள்ளது. வாசககர்கள்பயன்படுத்திக்கொள்ளவும்.

பின்குறிப்பு - தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மற்றும் சந்தேகங்களை pathanjaliyogakendhram@gmail .com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Tuesday, May 11, 2010

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?

--> விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் (ஆன்மீக) சைவ உணவே சாலச் சிறந்தது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. ஏன்? எதனால் ? வேண்டும் சைவம், மற்றும் வேண்டாம் அசைவம் என்று ஆன்மீக அன்பர்களுக்கு விளக்கமளிப்பது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் கடமையும் ஆகும்.


                                                         
சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உடல் அமைப்பும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகளின் உடல் அமைப்பும் ஒன்றை ஒன்று ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.


ஆனால் அசைவ உணவினை உட்கொள்ளும் புலி, சிங்கம், நாய், பூனை மற்றும் சைவ உணவினை உட்கொள்ளும் விலங்குகளோடு சிறிதும் ஒத்துப் போகாமல் பல்வேறு மாறுபட்ட ஜீரண உறுப்புகள் மற்றும் உடல் அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.


மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளின்
கடவாய்ப் பற்கள் தட்டையாக அரைத்து விழுங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.

உமிழ்நீர் உணவின் ருசிக்கு ஏற்றபடி குறைந்த அளவு சுரப்பதோடு அதில் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், ஜீரண சக்தியினை தரும் வகையில் பெரிய உமிழ் நீர் சுரப்பிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

உதடுகளால் நீரினை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் வாய் அமைப்பினை பெற்றிருக்கிறது.
உணவினை இரவிலோ அல்லது இருளிலோ பார்க்கும் தன்மை சைவ உணவு விரும்பிகளுக்கு இல்லை.

கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இரைப்பை, போன்ற வயிற்றின் உள்ளுறுப்புகள் சைவ உணவு விரும்பிகளுக்கு சிறியவைகளாகவும் உள்ளது.

மேலும் உணவுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற இயலாதவாறு உள்ளது.

இன்னும் கெட்டுபோன உணவுகள் பல சமயங்களில் விஷமாகவிடுவதால் மேற்படி உறுப்புகள் அந்த விஷத்தில் இருந்து தன்னையும் (தன் உறுப்புகளை), உடலையும் பாதுகாக்க முடியாமல் செயல்பாடுகளில் தோல்வி அடைகின்றன.

இந்த நிலையில் மருந்தின் உதவியாலோ அல்லது உண்ணா நோன்பினாலோ அந்த ஜீரணக் கருவிகள் சரி செய்யப்படுகின்றன.

மேலும் மனித உடலின் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் அமைப்பின் படி இயல்பாகவே உடல்கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.

மேலும் ஜீரண மந்தம் வயிற்று உபாதைகள் வருகின்றபோது ஜீரண கருவிகளுக்கு வேலைப்பளு ஏற்படாமல் தவிர்க்க பசியற்ற நிலை உணவில் விருப்பமின்மை, ஆகியவைகளால் உணவு மறுப்பு செயல்கள் இயல்பாக நிகழ்கின்றன.

சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது.

தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது.

அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான்.

நீர்க் கழிவுகள் தொடர்பான வரையில் வியர்வை மூலம் வெளியேறும் வகையில் தோல் அமைப்பில் நுண்ணிய பல லட்சம் துளைகளின் மூலம் வெளியேற்றப் படுகின்றது.

இந்த அமைப்பு மாமிச பட்சிணிகளுக்கு இல்லை. அவைகள் உடலில் விஷ நீர் வெளியேற்றத்திற்கு தனது நாக்குகளை தொங்கப் போட்டு, வெளியே தொங்க வைத்து அதன் மூலம் வடிகால் நிகழ்வு நடைபெறுகின்றது.

இன்றைய விஞ்ஞான உலகின் மக்கள் தொகை , அதிக அளவு உணவின் அவசியம் மற்றும் குறைந்த கால உற்பத்தி என்ற நோக்கில் ரசாயன உரம் தாவரங்களுக்கு அளிப்பதால் அவற்றின் விஷத் தன்மை தாவர உணவின் மூலம் மனித உடலுக்கு கேடு தருகின்றவையாக இருக்கத்தான் செய்கிறது.



இதன் காரணமாக உரங்களின் விஷத் தன்மை மனித மற்றும் இதை உண்ணும் உயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாக உடல் பாதிப்பை பெறுகின்றன.



இதன் தீர்வாக ரசாயன உரத்திலிருந்தும் விலகி இயற்கை உரத்திற்கு மாறுதலுக்கு உரிய சூழல்கள் வந்து கொண்டிருக்கின்றன.



இந்த நிலையில் நேரடியாகவே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசைவ உணவினை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை பல்வேறு விளக்கங்களுடன் மனித நலம், நேயம் கருதி ஸ்வார்த்தம் சத் சங்கம் வெளியிட முனைகிறது.



இதனுடைய வரவேற்பு ஒரு விளம்பர செய்தியாக இல்லாமல் மனித உயிரிகளின் விலையினை உணர்வோர்கள் நிச்சயம் இதற்கு வரவேற்பு அளிப்பார்கள் அத்துடன் அந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பெரிதும் எங்களுக்கு இருக்கின்றது.


                                                                                                             (தொடரும்)







TRANSLATE

Click to go to top
Click to comment