42. திருக் கோஷ்டியூர்
பெருமாள்                        : உரகமெல்லணையான்-
சௌளம்ய நாராயணன் 
   புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்                            : திருமாமகள் – நாச்சியார்
விமானம்                        : அஷ்டாங்க  விமானம் 
தீர்த்தம்                          : தேவபுஷ்கரிணி 
ப்ரத்யக்ஷம்                    : கதம்ப மாமுனி   
மங்களாசாசனம்            : பெரியாழ்வார்,
கலியன், பூதத்தார், பேயார்,
திருமழிசை ஆழ்வார் [ 39
பாசுரங்கள் ]
ராமானுஜர் இக்கோயிலின்  கோபுரத்திலிருந்து திவ்யமந்த்ரம் உபதேசித்ததால்
திருமந்திரம் விளைந்த தலம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 
திருக்கோஷ்டியூர் நம்பியின் அவதாரஸ்தலம்.
மதுரை – திருப்பத்தூர்- சிவகங்கை
மார்கத்தில் திருப்பத்தூரிலிருந்து 10 கி.மீ.
தூரத்தில் உள்ளது, காரைக்குடியிலிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. 
                                                 43.
திருமெய்யம் 
பெருமாள்                        :ஸத்யகிரிநாதன் –
மெய்யப்பன்
                                      நின்ற திருக் கோலம், கிழக்கே  திருமுக மண்டலம் 
தாயார்                            : உய்ய வந்த நாச்சியார் –
உஜ்ஜீவனத் தாயார் 
விமானம்                       : ஸத்யகிரி  விமானம் 
தீர்த்தம்                        : ஸத்ய தீர்த்தம் , கதம்ப
புஷ்கரிணி 
ப்ரத்யக்ஷம்                 : ஸத்ய தேவதை  
மங்களாசாசனம்         : திருமங்கையாழ்வார் [
9 பாசுரங்கள் ]
இது ஒரு குடைவரைக் கோயில்.
புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து 20
கி.மீ தொலைவில் உள்ளது 
44. திருப்புல்லாணி [ தர்ப்ப சயனம் ]
பெருமாள்                 : கல்யாண ஜகந்நாதன்
                                வீற்றிருந்த
திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 
தாயார்                     : கல்யாண
வல்லி – பத்மாஸநி 
விமானம்                  : கல்யாண விமானம் 
தீர்த்தம்                     : ஹேம
தீர்த்தம் , சக்ரதீர்த்தம்  
ப்ரத்யக்ஷம்               : புல்லாரண்யா
மஹரிஷி, அச்வத்த நாராயணன் ,ஸமுத்ரராஜன்  
மங்களாசாசனம்        : திருமங்கையாழ்வார் [   21 பாசுரங்கள் ]
ராமநாதபுரம் தெற்கே 8
கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சி – மதுரை – காரைக்குடி போன்ற
இடங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு பேருந்து , ரயில் வசதி உள்ளது.
45.
திருத்தண்கால் (திருத்தங்கல்)
பெருமாள்                                  :
அப்பன் – தண்காலப்பன் 
                                                   
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்                                      : அன்ன நாயகி – அநந்த நாயகி , அம்ருத நாயகி, 
                                                  
ஜாம்பவதி என்னும் நால்வர் நாச்சிமார்கள் 
விமானம்                                  : தேவந்த்ர விமானம் 
தீர்த்தம்                                     : பாபவிநாச தீர்த்தம் 
ப்ரத்யகூக்ஷம்                           : சல்ய
பாண்ட்ய மஉறாராஜா, ஸ்ரீவல்லபன், புலி
மங்களாசாசனம்                       :
திருமங்கையார் , பூதத்தாழ்வார் ( 5 பாசுரங்கள் )
சிவகாசியிலிருந்து விருதுநகர்
செல்லும் மார்க்கத்தில் சிவாகாசியிலிருந்து 3 கி.மீ
. தூரத்தில் உள்ளது. நகரப்பேருந்து வசதியும் உள்ளது. விருதுநகர் – தென்காசி இரயில்
மார்க்கத்தில் திருத்தண்கால் ஒரு இரயில் நிலையம்.
46.திருமோகூர்
பெருமாள்                                      : காளமேகப்பெருமாள் 
                                                        
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்                                          : மோகனவல்லி- மோகூர்வல்லி 
விமானம்                                      : கேதகி விமானம் ( வேதாமோதவிமானம்
)
தீர்த்தம்                                         : கூஷீராப்திபுஷ்கரிணி
ப்ரத்யகூஷம்                                : ப்ரம்மா இந்திரர்களுக்கு 
மங்களாசாசனம்                          : நம்மாழ்வார் , திருமங்கையார் (12
 பாசுரங்கள் )
மதுரையிலிருந்து மேலூர் செல்லும்
சாலையில் ஒத்தக்கடை நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ
தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் நகரப் பேருந்துகள்
திருமோகூருக்குச் செல்கின்றன.
47.திருக்கூடல் ( தென்மதுரை )
பெருமாள்                                     : கூடலழகர்
                                                      
வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். 
தாயார்                                          : மதுரவல்லி – மரகதவல்லி ,
வரகுணவல்லி 
விமானம்                                      : அஷ்டாங்க விமானம்
தீர்த்தம்                                         : உறமபுஷ்கரிணி ,
சக்ரதீர்த்தம் 
ப்ரத்யகூக்ஷம்: ப்ருகுமஉறரிஷி ,
சௌணகாதிகள், பெரியாழ்வார் 
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ,
திருமழிசையார் ( 2 பாசுரங்கள் )
பெரியாழ்வார் பல்லாண்டு பாடியதலம்.
மதுரை மாநகரிலேயே மதுரை இரயில்
நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 1 கி.மீ
தூரத்தில் உள்ளது. 
48.
ஸ்ரீவில்லிபுத்தூர்
பெருமாள்                                        : வடபத்ரசயனர் – ரங்கமன்னர் 
தாயார்                                             : வடபத்ரசயணம், கிழக்கே திருமுக
மண்டலம் 
விமானம்                                         : ஸம்சன விமானம் ( சௌம்ய விமானம் )
தீர்த்தம்                                           :
திருமுகக்குளதீர்த்தம் 
ப்ரத்யக்ஷம்                                     : மண்டூகமஹரிஷி 
மங்களாசாசனம்                             : பெரியாழ்வார் , ஆண்டாள் ( 2 பாசுரங்கள் )
பெரியாழ்வார்                                : ஆண்டாள் அவதாரத்தலம் 
மதுரையிலிருந்து ராஜபாளையம் –
தென்காசி செல்லும் வழித்தடத்தில் உள்ள தலம். தென்காசி விருதுநகர் ரயில்பாதையில்
உள்ள ரயில் நிலையம் .
49. திருக்குருகூர் ( ஆழ்வார் திருநகரி )
பெருமாள்                         : ஆதிநாதப்பெருமாள் – பொலிந்துநின்றபிரான் 
                                                 
: நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 
தாயார்                               : ஆதிநாதவல்லி – குருகூர்வல்லி
விமானம்                           : கோவிந்த விமானம் 
தீர்த்தம்                              : தாம்ரபர்ணி நதி, ப்ரஉற்ம்
தீர்த்தம் 
ப்ரத்யக்ஷம்                        : பிரமன், நம்மாழ்வார் , மதுரகவிகள் 
மங்களாசாசனம்                : நம்மாழ்வார் ( பாசுரங்கள் )
திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலை
மார்க்கத்தில் ஆழ்வார்திருநகரி என்று அழைக்கப்பெறும் தலம் திருநெல்வேலி –
திருச்செந்தூர் இரயில் பாதையில் ஆழ்வார்திருநகரி இரயில் நிலையத்திலிருந்து கிமீ
தூரத்தில் உள்ளது 
50. திருத்தொலைவில்லிமங்கலம் ( இரட்டைத்திருப்பதி )
பெருமாள்                                         : தேவபிரான்
                                               
          நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 
தாயார்                                             : உபயநாச்சிமார்கள் 
பெருமாள்                                          : அரவிந்தலோசனன்
                                                    
வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் 
தாயார்                                        கருந்தடங்கண்ணி நாச்சியார் 
விமானம்                                    குமுத விமானம் ( குப்த விமானம்
)
தீர்த்தம்                                      தாமரபர்ணி நதி, வருண தீர்த்தம் 
ப்ரத்யக்ஷ்ம்                                இந்திரன்
, வாயு, வருணம் 
ஆழ்வார் திருநகரியிலிருந்து
திருச்செந்தூர் பாதையில் கி.மீ தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றைக் கடந்து இத்தலத்தைச்
சேவிக்கலாம் 
 

 
 


No comments:
Post a Comment