Saturday, October 29, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 8 )


24. காழிச்சீராம  விண்ணகரம்
[ சீர்காழி தாடாளன் கோவில் ]

பெருமாள்               : தாடாளன் – திருவிக்கரமமூர்த்தி நின்ற திருக்கோலம்,
                                                             கிழக்கே   திருமுக மண்டலம் 

தாயார்                       : மட்ட விழுங்குழலி – லோக நாயகி

விமானம்                 : புஷ்கலாவர்த்தக விமானம் 

தீர்த்தம்                   : சக்ர தீர்த்தம் , சங்க புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்           : அஷ்டகோண மஹரிஷி 

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]

திருமங்கையார் ஞானசம்பந்தரை வாதில் வென்று நாலுகவிப் பெருமாள் என்ற விருதைப் பெற்ற இடம் 


சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகளில் சென்று கோயில் வாசலில் இறங்கிக்கொள்ளலாம் 



25. திருக் கூடலூர்

[ஆடுதுறைப் பெருமாள் கோவில் ]



பெருமாள் : வையக்காத்த பெருமாள் – ஜகத்ரஷகன்  நின்ற
                                          திருக்கோலம் ,  கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                     : பத்மாஸநவல்லி

விமானம்               : சுந்தரஸத்வ விமானம் 

தீர்த்தம்                    : சக்ர தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்            : நந்தகமாமுனி 

மங்களாசாசனம்  : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]

தஞ்சை – திருவையாறு- கும்பகோணம் பேருந்து மார்கத்தில் திருவையாறிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள தலம்.





26. திருக்கண்ணங்குடி


பெருமாள்             : ச்யாமளமேனிப் பெருமாள் ,நின்ற திருக்கோலம் ,
                                          கிழக்கே  திருமுக மண்டலம் 

தாயார்                    : அரவிந்தவல்லி நாச்சியார்

விமானம்               : உத்பல விமானம் 

தீர்த்தம்                   : ச்ரவண புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்            : ப்ருகு சைத்யர் , கௌதம முனி

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]

நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலை வழியில் ஆழியூர் என்ற இடத்திலிருந்து தெற்கே 1 கி.மீ தூரத்தில் உள்ள தலம். திருவாரூர்- நாகை இருப்புப்பாதையில் கீழ்வேளுர் இரயில் நிலையத்திலிருந்து  2 கி.மீ தூரம்  





27. திருக்கண்ணமங்கை

பெருமாள்               : பக்தவத்சலப் பெருமாள் –பத்தராவிப் பெருமாள்
                   நின்ற திருக்கோலம்,         கிழக்கே   திருமுக மண்டலம்

தாயார்                       : அபிஷேகவல்லித் தாயார்

விமானம்                 : உத்பல  விமானம் 

தீர்த்தம்                   : தர்சன  புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்           : வருணன், ரோமசமுனி  

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 14 பாசுரங்கள்]

விமானம் , வனம், மண்டபம் தீர்த்தம் , க்ஷேத்ரம் . நதி, நகரம் ஆகிய ஏழு அங்கங்களும் அமுதமயமாக உள்ளதால் ஸப்தாம்ருத க்ஷேத்திரம் ப்ரஸித்தி. லக்ஷ்மி வனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

கும்பகோணம்-திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.








28. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

பெருமாள்               : கஜேந்திர வரதர்  
                   புஜங்க சயனம் ,        கிழக்கே   திருமுக மண்டலம் 
தாயார்                       : ரமாமணிவள்ளி – பொற்றாமரையாள்
விமானம்                 : ககனாக்ருதி   விமானம் 
தீர்த்தம்                   : கஜேந்திர  புஷ்கரிணி 
ப்ரத்யக்ஷம்           : கஜேந்திரன் , ஆஞ்சனேயர்  
மங்களாசாசனம் : திருமழிசையாழ்வார் [ 1 பாசுரம்]
தஞ்சாவூர்-திருவையாறு-கும்பகோணம் வழியில் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்தும், பாபநாசத்திலிருந்தும்  பேருந்து வசதி உள்ளது.



29. திருவெள்ளியங்குடி


பெருமாள்               : கோலவல்லி ராமன்   
                   புஜங்க சயனம் ,        கிழக்கே   திருமுக மண்டலம் 
தாயார்                       : மரகதவல்லி நாச்சியார் 
விமானம்                 : புஷ்கலாவர்த்தக   விமானம் 
தீர்த்தம்                   : சுக்ர புஷ்கரிணி , ப்ரஹம தீர்த்தம் 
ப்ரத்யக்ஷம்           : சுக்ரன், பிரமன், பராசரர் , இந்திரன், மயன்,               மார்க்கண்டேயன், பூமிதேவி   
 
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 1 பாசுரம்]
கும்பகோணத்திலிருந்து, அணைக்கரை போகும் பேருந்தில் பெரியவச்சான் பிள்ளையின் அவதாரஸ்தலமான  சேங்கானூரில் இறங்கி ஒரு கி.மீ தூரம் நடக்க வேண்டும். முட்டக்குடியிலிருந்தும் செல்லலாம்.

(தொடரும் )




No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment