Tuesday, October 4, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 6 )


13. தலைச்சங்க நாண்மதியம் [தலச்சங்காடு ]

பெருமாள்                  : நாண் தியப் பெருமாள் – வெண்சுடர்ப் பெருமாள்
                                              நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுருக மண்டலம் 

தாயார்                       : தலைச்சங்க நாச்சியார் – செங்கமலவல்லி


விமானம்                  : சந்திர விமானம் 

தீரத்தம்                       : சந்திர புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்              : சந்திரன், தேவர்கள், நித்யஸீரிகள் 

மங்களாசாசனம்  : திருமங்கையாழ்வார் [ 2 பாசுரங்கள் ]

மாயூரம் – ஆக்கூர்- சீர்காழி சாலை மார்க்கத்தில் ஆக்கூரிலிருந்து  3 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைச்சங்காடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 / 2 கி.மீ. தொலைவில் வயலின் நடுவே இத்தலம் அமைந்துள்ளது .





14.திருக்குடந்தை

பெருமாள்                                 : சாரங்கபாணி – ஆராவமுதன்
                                                           உத்யோக சயனம், தெற்கே திருமுக மண்டலம் 

தாயார்                                       : கோமளவல்லி 

விமானம்                                  : வேதவேத விமானம் 

தீர்த்தம்                                     : ஹேமபுஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                              : ஹேமமஹரிஷி 

மங்களாசாசனம்                 : பொய்கை, மதுரகவி, குலசேகரர், திருப்பாணன்,                                                           
                                                           தொண்டரடிப்பொடி தவிர ஏனைய ஆழ்வார்கள்
                                                         [ 51 பாசுரங்கள் ]


நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை நாதமுனிகள் தொகுப்பதற்கு காரணமாகியவர் இத்தலத்துப் பெருமாள்.
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி மிக்க நகரம்.





15. திருக்கண்டியூர்

பெருமாள்                                           : ஹரசாபவிமோசனப் பெருமாள்
                                                                    நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                                : கமலவல்லி

விமானம்                                            : கமலாக்ருதி  விமானம் 

தீர்த்தம்                                               : கபால மோசன புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                                       : அகஸ்தியர், ருத்ரன் 

மங்களாசாசனம்                             : திருமங்கையாழ்வார் [ 1 பாசுரம் ]


தஞ்சை – திருவையாறு சாலை மார்கத்தில் தஞ்சையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது .



 (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment