Tuesday, September 27, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 3 )


ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரங்கள்

நிர்மாணம் செய்யப் பெறாமல் தாமாகவே உருவான ஸ்தலங்கள்.

1.       ஸ்ரீரங்கம்
2.       ஸ்ரீமுஷ்ணம் 
3.       திருமலை
4.       சாளக்கிராம மலை
5.       நைமிசாரண்யம்
6.       தோதாத்ரி என்ற வானமாமலை
7.       புஷ்கர க்ஷேத்ரம்
8.    பத்ரி



4. அன்பில்


பெருமாள்                       : வடிவழகிய நம்பி
                                                 புஜங்க சயனம் , தெற்கே திருமுகமண்டலம் 

தாயார்                              : அழகியவல்லித் தாயார்

விமானம்                        : தாரக விமானம் 

தீர்த்தம்                            : மண்டூக புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                    : ப்ரஹ்மா, வால்மீகி 

மங்களாசாசனம்        : திருமழிசையாழ்வார் [ 1 பாசுரம் ]

திருச்சிக்கு அருகே லால்குடிக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள நடராஜ புரத்திலிருந்து 3 / 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்பக்குடத்தான் சன்னதியிலிருந்து கொள்ளிடம் கடந்தும் செல்லலாம் . 










5 .திருக்கரம்பனூர் [ உத்தமர் கோயில் ]

பெருமாள்          : புருஷோத்தமன்
                     புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்             : பூர்வாதேவி பூர்ணவல்லி

விமானம்           : உத்யோக விமானம் 

தீர்த்தம்             : கதம்ப தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்          : கதம்ப மஹரிஷி , உபரி சரவஸீ
                                                      திருமங்கையாழ்வார் [ 1 பாசுரம் ]

மங்களாசனம்                : திருமங்கையாழ்வார் 

சிவன் பிரம்மா விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதி உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ள இத்தலத்தை திருச்சியிலிருந்து துறையூர் மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்று அடையலாம்.



6. திருவெள்ளறை- ஸ்வேதகிரி

பெருமாள்                : புண்டரீகாக்ஷன்
   நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                       : பங்கயச் செல்வி 

விமானம்                  : விமலாக்ருதி விமானம் 

தீர்த்தம்                      : குச, மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த,  பத்மதீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்             : கருடன்,சிபி, பூதேவி , மார்க்கண்டேயன் , லக்ஷ்மி 

மங்களாசாசனம்  : திருமங்கையாழ்வார் , பெரியாழ்வார் [ 24 பாசுரங்கள்]
உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாராஸ்தலம். 

திருச்சி – துறையூர் மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 20 கி.மீ.   தொலைவில் உள்ளது. பேருந்து பாதையிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.



(தரிசனம்  தொடரும் .................)

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment