Monday, July 30, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 பகுதி (14 )


67.திருவண்வண்டூர்

(திருவமுண்டூர்)

பெருமாள்                                :    பாம்பணையப்பன்

                                                 நின்ற திருக்கோலம்   , மேற்கே திருமுக மண்டலம் 


தாயார்                                     : கமலவல்லி நாச்சியார் 

விமானம்                                 : ஸகல வேத  விமானம் 

தீர்த்தம்                                   : பம்பா தீர்த்தம்     

ப்ரத்யக்ஷம்                             : நாரதர் 

மங்களாசாசனம்                      : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )


செங்கண்ணுரிலிருந்து  வடக்கே ஆறு கி.மீ தொலைவில் பேருந்து மார்க்கத்தில் உள்ளது.








68. திருவாட்டாறு 


பெருமாள்                                :ஆதிகேசவப்பெருமாள்
                                                 புஜங்க சயனம்  , மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                                     : மரகத வல்லி நாச்சியார் 

விமானம்                                  :அஷ்டாக்ஷரகல்யாண விமானம் 

தீர்த்தம்                                    :ராம   தீர்த்தம் 

ப்த்யகூக்ஷம்                            : சந்திரன் , பரசுராமன் 

மங்களாசாசனம்                       : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )

நாகர்கோவிளில் இருந்து 30   கி.மீ தொலைவில் உள்ளது. நாகர்கோவில் திருவனந்தபுரம் பேருந்து மார்க்கத்தில் தக்கலையில் இருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ளது.







69.திருவித்துவக்கோடு 

(திருவிச்சிக் கோடு )


பெருமாள்                                       : உய்யவந்த பெருமாள் – அபயப்ரதன்
                                                     நின்ற திருகோலம் , தெற்கே திருமுக மண்டலம் 


தாயார்                                             : வித்துவக்கோட்டு வல்லி நாச்சியார் 

விமானம்                                         : தத்வகாஞ்சன விமானம் 

தீர்த்தம்                                           :  சக்ர தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                     : அம்பரீஷன் 

மங்களாசாசனம்                              :    குலசேகராழ்வார் ( 10 பாசுரங்கள் )

பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம். 

ஷோரனுர் – காலிகாட் இருப்புப்பாதை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. 



70.திருக்கடித்தானம் 


பெருமாள்                                       : அற்புத நாராயணன் – அம்ருத நாராயணன் 

                                                     நின்ற திருகோலம் , கிழக்கே  திருமுக மண்டலம் 

தாயார்                                             : கற்பக வல்லி நாச்சியார் 

விமானம்                                          : புண்ய கோடி  விமானம் 

தீர்த்தம்                                            :  ஸ்ரீ பூமி  தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                      : ருக்மாங்கதன் 

மங்களாசாசனம்                               :    நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )



திருவல்லா- கோட்டயம் சாலையில் செங்கனாச்சேரியில் இருந்து கிழக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள தலம். நகரப் பேருந்து வசதி உள்ளது. 



71. திருவாறன்விளை 

(ஆரமுளா )


பெருமாள்                                      :     திருக்குறளப்பன்
                                                     நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                           : பத்மாஸனி 

விமானம்                                       : வாமன   விமானம் 

தீர்த்தம்                                         : வ்யாஸ தீர்த்தம் , தேவ புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                                   :  வேதவியாசர் , பிரம்மா 

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )


அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த தலம்

செங்கனூரிலிருந்து கிழக்கே  10 கி.மீ தொலைவில் உள்ளது . பஸ் வசதி உள்ளது. 



72. திருவஹிந்திரபுரம்


பெருமாள்                                     :     தெய்வனாயகன் – தேவநாதன்
                                                           நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுக  மண்டலம் 

தாயார்                                           : வைகுண்ட வல்லி - ஹேமாம்மபுஜவல்லி  

விமானம்                                       : சுத்தஸத்வ விமானம் 

தீர்த்தம்                                         : சேஷ தீர்த்தம்  , கருட நதி 

ப்ரத்யக்ஷம்                                   :  சந்திரன், கருடன் 

மங்களாசாசனம்                            :  திருமங்கையாழ்வார்
                                                          ( 10 பாசுரங்கள்  )

திருச்சி – சென்னை மெயின் லைனில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து  5 கி.மீ தூரத்தில் உள்ளது. கடலூர் பஸ்நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. 


73. திருக்கோவிலூர்

பெருமாள்                                      :     த்ரிவிக்ரமன்
 நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுக   மண்டலம் 

தாயார்                                          : பூங்கோவல் நாச்சியார் 

விமானம்                                       : ஸ்ரீகர  விமானம் 

தீர்த்தம்                                         : கிருஷ்ண  தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                                   :  ப்ருகண்டு முனி, மஹாபலி சக்ரவர்த்தி 

மங்களாசாசனம்                            :  பொய்கையார் , பூதத்தார் , திருமங்கையாழ்வார்( 21 பாசுரங்கள்  )


மூன்று திருவந்தாதிகள் உருவான தலம் .


விழுப்புரம் – காட்பாடி இரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் உள்ளது.                       திருவண்ணாமலை – விழுப்புரம் சாலை மார்க்கத்தில் 36 கி.மீ தூரத்தில் உள்ள தலம் 


74 .திருக்கச்சி (காஞ்சிபுரம்)


பெருமாள்                                    :     வரதராஜப்பெருமாள்- பேரருளாளன்
                                                     நின்ற  திருக்கோலம், மேற்கே திருமுக   
                                                      மண்டலம் 

தாயார்                                        : பெருந்தேவித்தாயார்  

விமானம்                                     : புண்ய கோடி விமானம் 

தீர்த்தம்                                        :  சேஷ , வராஹ, பத்ம , தீர்த்தங்கள் , வேகவதி 

ப்ரத்யக்ஷம்                                   :  பிரம்மா  , கஜேந்திரன்  ,ஆதிசேஷன், ப்ருகு 

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ,  பூதத்தார் , கலியன்  
                                                        ( 13 பாசுரங்கள்  )


சென்னை – பெங்களூர்  சாலை மார்க்கத்தில் சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து ரயில் வசதி உள்ளது.






No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment