Tuesday, July 24, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 பகுதி (12)







51.சிரீவரமங்கை
வானமாமலை ( நாங்குநேரி )

பெருமாள்                                    தெய்வநாயகன் – தோதாத்ரி
                                                 வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                     : சிரீவரமங்கை 

விமானம்                                  : நந்த வார்த்தன விமானம் 

தீர்த்தம்                                      இந்த்ரபுஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்                              : இந்திரன் , ப்ரம்மா  , உரோமசரிஷி,ப்ருகு 

மங்களாசாசனம்                        : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )

திருநெல்வேலி – நாகர்கோவில் மார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நான்குநேரி என்று அழைக்கப்படும் தலம். வானமாமலை மடத்தின் தலைமைப்பீடம் அமைந்துள்ள தலம்.



 


52. திருப்புளியங்குடி

பெருமாள்                           காய்சினவேந்தன்
                                               புஜங்கசயனம் , கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                  :   மலர்மகள்நாச்சியார் – புளிங்குடிவல்லி 

விமானம்                               :   வேதஸராவிமானம் 

தீர்த்தம்                                  :  வருணதீர்த்தம் , நிருதி தீர்த்தம்

ப்த்யக்ஷம்                               :   நிரூதி , வருணன், தர்மராஜன் 

மங்களாசாசனம்                     நம்மாழ்வார் ( 12 பாசுரங்கள் )

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து  3 கி.மீ தொலைவில் உள்ள திவ்ய தேசம். 

வரகுணமங்கையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்று.











53.திருப்பேரை
( தென்திருப்பேரை )

பெருமாள்                                       : மகர நெடுங்குழைக்காதன்
                                                        வீற்றிந்த திருகோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                             : குழைக்காதுவல்லி நாச்சியார் 

விமானம்                                         : பத்ரவிமானம் 

தீர்த்தம்                                            :  சுக்ரபுஷ்கரிணி ( சங்க தீர்த்தம் )

ப்ரத்யக்ஷ                                        : ப்ரம்மா , சுக்ரன், ஈசான்யருத்ரன்

மங்களாசாசனம்                               :    நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )

திருநெல்வேலி – ஆழ்வார்திருநகரி – திருச்செந்தூர் மார்க்கத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்று.








54. ஸ்ரீ வைகுண்டம்

பெருமாள்                                     :     கள்ளப்பிரான்
                                                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                           : வைகுந்த வல்லி நாச்சியார் 

விமானம்                                       : சந்த்ர விமானம் 

தீர்த்தம்                                           : ப்ருகுதீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                   :  இந்திரன், ப்ருகு 

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலை  மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 0 கி.மீ தொலைவில் உள்ளது.பேருந்து வசதிகள் உள்ள தளம்.
நவதிருப்பதிகளில் ஒன்று.



55. வரகுண மங்கை
(நத்தம் )

பெருமாள்                                     :     விஜயயாஸனர்
                                                 வீற்றிருந்த  திருக்கோலம், கிழக்கே திருமுக  மண்டலம் 

தாயார்                                           : வரகுண வல்லி  

விமானம்                                       : விஜய கோடி விமானம் 

தீர்த்தம்                                           : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                                   :  அக்னி , சத்யவான் 

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ( 1 பாசுரம் )

நத்தம் என்று எல்லோருக்கும் தெரிய வரும் தலம். இத்தலம் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது . நவதிருப்பதிகளில்  ஒன்று. மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த தலம். 


56. திருக்குளந்தை
(பெருங்குளம்  )

பெருமாள்                                     :     மாயக் கூத்தன் –ஸ்ரீநிவாசன்
                                                       நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுக  மண்டலம் 

தாயார்                                           : குளந்தை வல்லி  -அலமேலு மங்கை 

விமானம்                                       : ஆனந்த நிலைய விமானம் 

தீர்த்தம்                                         : பெருங்குள தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                                   :  ப்ருஹஸ்பதி

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ( 1 பாசுரம் )

இத்தலம் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து ஏரல் செல்லும் சாலை மார்க்கத்தில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து  12 கி.மீ. தொலைவில் உள்ளது . பெருங்குளம் என்று அழைக்கப் படும் இத்தலம் நவதிருப்பதிகளில்  ஒன்று.








57. திருக்குறுங்குடி 

பெருமாள்                                     :     வைஷ்ணவ நம்பி
                                                       நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுக  மண்டலம் 

தாயார்                                           : குறுங்குடிவல்லி நாச்சியார் 

விமானம்                                       : பஞ்சகேதக  விமானம் 

தீர்த்தம்                                           : திருப்பாற்கடல், பஞ்சதுறை , சிந்துநதி 

ப்ரத்யக்ஷம்                                   :  சிவன் 

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் , பெரியாழ்வார்,
                                                       திருமழிசையாழ்வார்,  திருமங்கையாழ்வார்
                                                        ( 40 பாசுரங்கள்  )

திருமங்கையாழ்வார் பரமபத பெற்ற தலம் , குறுங்குடி நம்பி, நின்ற நம்பி , வடுக நம்பி , திருபாற்கடல் நம்பி, மலைமேல்நம்பி என்ற திருநாமங்களில் பெருமாள் விளங்கும் தலம் 

நாங்குநேரியில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தலம். வள்ளியூர் களக்காடு ஆகிய இடங்களில் இருந்து பேரூந்து வசதி உள்ளது




58. திருக்கோளூர் 

பெருமாள்                                     :     வைத்தமாநிதி –நிக்ஷே பவித்தன்
                                                       புஜங்க சயனம் , கிழக்கே திருமுக  மண்டலம் 

தாயார்                                           : கோளுர்வல்லி நாச்சியார் 

விமானம்                                       : ஸ்ரீகர    விமானம் 

தீர்த்தம்                                           : தாமிரபர்ணிநதி,குபேரதீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                   :  குபேரன், மதுரகவியார் 

மங்களாசாசனம்                            :   குபேரன், மதுர கவியார் 
                                                         நம்மாழ்வார் ,   ( 12 பாசுரங்கள்  )


மதுர கவி ஆழ்வார் அவதார தலம். நவதிருப்பதிகளில் ஒன்று. 

ஆழ்வார் திருநகரி – திருச்செந்தூர் மார்க்கத்தில் ஒரு கிளைப் பாதையில் ஆழ்வார் திருநகரியில் இருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில் உள்ளது .




 
 






No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment