Saturday, July 3, 2010

நம் வீட்டின் வரலாறு - பகுதி 3

பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை, (தாது உப்புகள் போன்றவைகள்) கரைத்து நீர்ம நிலையில் , தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.

                                                        
சூரிய ஒளியும், வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல், பூண்டுகள்,  காளான்கள் போன்றவைகளும் , நீர்ம நிலையில் பாஷம்  போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று.



இவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம். இப்படி நீரில் பாஷம்  போன்ற எளிய வகை தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின.




இப்படி நீரிலும், நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவற இனனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும், சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன.


பிறகு இந்த தாவரங்கள்  அழிந்து , மக்கி  மண்ணில் மறைந்தன . இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்ற காரணமான மண்ணின் சத்தாக மாறின.  இப்படியே சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும், நீரிலும் , தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது.


முதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிக சிறிய தாவர இனங்கள் பிறகு செடி, கொடிகளாகவும், மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது. பூத்து , காய்த்து, கனிந்து , அதில் இருந்து விதிகள் என்பது உண்டாகி, அவைகள் மறுபடியும் நீரிலும், நிலத்திலும் பல கோடி தாவர இனங்கள் உண்டாக காரணமாக இருந்தன.  இயற்கையும் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி கொடுத்தது.


இந்த கால கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு  வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை. அப்போது  அதிக அளவு கரியமில வாயுதான்  காற்று மண்டலத்தில் இருந்தது.  அதனால் தாவர இனங்கள்  பகலில்  கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு  பிராண வாயுவை வெளியிட்டன. இரவில்  பிராண வாயுவை எடுத்துக் கொண்டு  கரியமில வாயுவை வெளியிட்டன.  இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்கு தேவையான பிராண வாயுவை சரியான விகித சாரத்தில் வைத்துக் கொண்டது.


இந்தவிதமான பூமியானது சுமார் 40 ,000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது . என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 


முதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது. இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின. இந்த உலகம் தோன்றியபோது எழுந்த  ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற ஓம் ஒலியாகும்.


பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்கு  பல காரணங்களை அறிவியல் நமக்கு சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்க கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று  அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே 
அந்த பரம்பொருளான இறைவன் ஆவான் . 

பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும்  இறைவனின் சங்கல்பம் ஆகும்.

2 comments:

TRANSLATE

Click to go to top
Click to comment