Wednesday, April 1, 2026

ராஜயோகத்தின் வேர்கள் (BEYOND THE MIND)

பதஞ்சலி மஹரிஷியின் தியான அறிவியலும் சில புரிதல்களும்

 

 "இறைவன் மீது ஆழமாக அன்பு செலுத்துவதே பக்தி யோகம். அந்த அன்பே ஆழமான அனுபவமாக மாறுவதுதான் ராஜயோகம்."

வாழ்வே ஒரு யோகக் களம்: கர்ம வினைகளை வெல்லும் உள்முகப் பயணம்

 

  இந்த பதிவை வாசிக்கும் அனைவருக்கும் ஆன்ம வணக்கங்கள் 

இந்தப்பதிவு யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவது அல்ல; மாறாக, நம் எல்லோருடைய மனசாட்சிக்குமான ஒரு ஆழமான உரையாடல்.

                                                      

Sunday, February 8, 2026

ஓம்: அழியாத பேரொலியும்... எமதர்மன் உபதேசமும்

 

   கட உபநிஷத்தில், மரணத்தின் ரகசியங்களை அறியச் சென்ற நசிகேதனுக்கு எமதர்ம ராஜா ஒரு உன்னதமான உண்மையை உபதேசிக்கிறார். உலகில் உள்ள அனைத்து வேதங்களும், தவசிகளும் எதை அடையும் இலக்கோடு பயணிக்கிறார்களோ, அந்த உன்னத இலக்கே "ஓம்" என்னும் மந்திரம்.

                                                                 


        

Tuesday, February 3, 2026

சத்குருவின் அருளும் ஆன்ம ஞானப் பாதையும்

இறைவன் மீதும் குருவின் மீதும் நாம் வைத்திருக்கும் பக்தி எப்போது ஆட்டம் காணுகிறது? குருவின் உண்மையான நோக்கம் என்ன? ஒரு ஆன்ம சாதகன் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரை இது.

                                          



1. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் :-

 

      ஒரு மனிதன் தனது லட்சியம், எதிர்காலம் மற்றும் விருப்பங்கள் குறித்து அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, அவனுள் எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்குகின்றன. இது அவன் இறைவன் மீது வைத்திருக்கும் பக்தியைச் சற்று அசைத்துப் பார்க்கிறது. "வணங்கினால் இன்பம் கிடைக்கும்" என்று தவறாகப் போதிக்கப்பட்டதே இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம்.

 

2. இறைவனே மேலான இன்பம்

      இறைவனை வணங்குவது உலகியல் இன்பங்களைப் பெறுவதற்காக அல்ல; மாறாக, அடைய வேண்டிய இன்பங்களுள் எல்லாம் மேலான இன்பமே இறைவன்தான். அவனை அடைந்த பிறகு, இவ்வுலகில் அடைவதற்கு வேறொன்றும் இல்லை. இந்த உலகத்தையும், இந்தப் பிறவியையும் இறைவனை அறிவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, உடைமைகளைப் பாதுகாக்கும் காவலாளியாக இறைவனைக் கருதக்கூடாது.

 

3. உலகியல் பார்வையும் அறியாமையும்

      "இவ்வளவு காலம் குருவை வணங்கியும் உனக்கு ஏன் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை?" என்று கேட்பது அறியாமையின் வெளிப்பாடு. குருவை அடைவது என்பது போக விஷயங்களில் (உலகியல் இன்பங்களில்) உச்சத்தைத் தொடுவதற்காக அல்ல; அவரது திருவடிகளைப் பின்பற்றி ஆத்ம ஞானம் பெறுவதற்காகவே என்பதைச் சீடர்கள் அறிவார்கள்.

 

 

Sunday, October 5, 2025

பஞ்சமிப் பரவசம் ( மாதங்கி )

அன்னை மாதங்கி அருள் - 4

 

மொத்த பரிமாற்றமும்

நித்தமும் நினைவில் வைத்து

மகிழ்ந்திருக்கும் உன் வித்தகம்ௐ

TRANSLATE

Click to go to top
Click to comment