அன்னை மாதங்கி அருள் - 4
மொத்த பரிமாற்றமும்
நித்தமும் நினைவில் வைத்து
மகிழ்ந்திருக்கும் உன் வித்தகம்ௐ
எண்களில் காலம் கடந்தும்
புதுமை நீ என என்னை ஆழ்த்திடும்
உன் ஆளுமை ஆச்சரியம் 🦜🦜🦜
வார்த்தைகளில் வாழ்பவனை
மௌன திரைக்குள் இருந்து
ஆண்டு விட்ட உன் செயல் அற்புதம் 🦜🦜🦜
அந்நாள் மன மகிழ்வை முன்னாள்
என்றில்லாமல் எந்நாளும்
தொடர்ந்திட செய்வாயோ???
அலைகடல் உள்ளம் கொண்டு ஆர்ப்பரிப்பவனை
அமைதியால் அரவணைக்கும்
அன்னை போல்🦜🦜🦜
உருவமும் கொண்டாய்
உள்ளத்தில் பெரிதாய் நின்றாய்
உன் மாறாத அன்பு எப்போதும்
எனக்கு மலைப்பு தரும்....🦜🦜🦜
நிகழ்வினை விரல் வழி கோர்க்காத
உன் அன்பின் ரகசியம்
ஆயுளுக்கும் புதுமையாய்
எனக்கு நீ அருள் செய்வாய் !🦜🦜🦜
ஈசனின் காதலே ! உமையவளே!
எனதுயிர் மாதங்கி🦜🦜
பஞ்சமி பரவசம் உன்னால் தொடரட்டும்🦜🦜
ஆக்கம்🦜🦜
#மாதங்கியின்_மைந்தன் @ #சிவ_உதயகுமார்
No comments:
Post a Comment