Sunday, August 21, 2011

மனிதமும் சனாதனமும்

மனிதமும் சனாதனமும் 

ஓம் 

ஸ்ரீ குருச் சரண் 

                                                                                  


 மனிதம் என்பது அதிசயங்களும் அற்புதங்களும் கொண்ட ஒரு பேராற்றல் மிக்க அறிவு ஜீவிகளின் பொதுச் சொல்லாகும்.

மனிதம் தவிர்த்த ஏனைய உயிரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட மனிதத்தைப் போலவே ஒத்த வாழ்க்கையை வாழ்கின்றன.

உண்பதில் , உறங்குவதில், உய்வதில், உறவு கொள்வதில் என்று அத்தனை செயல்களிலும் எந்த வித்தியாசமும் இன்றி அவைகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. 

ஆம் , நமக்குப் பசிக்கிறது 

. அவைகளுக்கும் பசிக்கிறது . நமக்கும்  உடற்பசி உண்டு . 

 அவைகளுக்கும் உண்டு . நாமும்  வாழ்கின்றோம்.  அவைகளும் வாழ்கின்றன. நமக்கு உறக்கம் வாழ்கின்றதோ இல்லையோ பெரும்பாலும் அவைகள் கவலையின்றி உறங்குகின்றன. ஏன் மனிதன் மட்டும் சிறப்புள்ளவனாக கருதப் படுகின்றான். பிற உயிரினங்களில் இருந்து  எது நமக்கு சிறப்புத் தன்மையினை தருவதாக உள்ளது. 

அது ஆறாவது அறிவு என்ற ஒன்றா ?


                                                               
     அவ்வாறெனில் நம்மைவிடக் குறைந்த அறிவே உள்ள அவைகள் நம்மை விடக் குறைந்த அறிவே உள்ள அவைகள் நம்மை  விட நிம்மதியும் , கவலையும் இன்றி வாழ்கின்றனவே 

 ஒருவேளை மானிடத்திற்கு உடல் பலமா, எனில் யானையும் சிங்கமும் சிறுத்தையும் போன்ற மிருகங்கள் நம்மை  விட பலமிக்கவையாக இல்லையா?

 
தீட்சண்யப் பார்வை சீரிய முகர்ச்சித் தன்மை (முகரும் தன்மை ) போன்றவைகள் நம்மை விட பறவைகளும் விலங்குகளும் பெற்றிருக்கின்றனவே. 




ஒருவேளை மனமும் நினைவும் என்று சொன்னால் மனிதம் அல்லாத உயிர்கள் அவை வாழ்வதற்கு ஏற்ற படி எந்தவகை அறிவைப் பெற்றுள்ளன ? 

நம்மைப் போல் வருத்தமோ, துன்பமோ, கவலையோ கொள்வதாக தெரியவில்லையே . இவை அத்தனையும் மீறி ஏதோ ஒன்று சிறப்புற்றதாக இருக்க வேண்டும். அதுவே நம்மை உயர்ந்த அறிவுஜீவியாக்கி உள்ளது.


மனித உடல் இயல்பினில் மன இயல்பினில் பல மடங்கு நம்ப முடியாத அளவுக்கு உடலாற்றல் , மன ஆற்றல்களை  எழுச்சி பெறச் செய்வதோடு, அவ்விரண்டின் துணை கொண்டும் மூன்றாவதாக ஒரு பேராற்றலை பெறவியலும் என்பதே அது. 

 இயல்பாகவே வாழ்ந்து இயல்பாகவே மரிப்பதேன்றில்லாமல் நம்மையும் , இந்த நிலவுலகையும் இப்பேரண்டத்தின் பரிமாணத்தில் ஒப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. அணுப்பொடியிலும் பொடியாக மிகச் சிறிய சொல்லப் போனால் குறிப்பிடுவதற்கு ஏதும் இல்லையென்ற  ஏதோ ஒரு வகைப் பரிமாணம் என்ற நினைவையும் இவ்வனைத்திற்கும் மேலான ஒரு  ஒரு உண்மை. 

இவ்வத்தனை பிரம்மாண்டத்தையும் படைக்கும் அதை ஆள்பவன் ஒருவன் இருப்பதும் அவன் யாராலும் எவற்றினாலும் படைக்கப் படாத நிரந்தரமான ஒரு இருப்பு என்பதோடு அந்த ரகசியத்தை  உணர்ந்து அதனைக் காண விழையும் பேரார்வம் மிக்க ஆன்மீக அறிவை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு ஜீவ எழுச்சியே மனிதத்தின் சிறப்பு. 


மனிதனுள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்  ஒரு பேராற்றல் மனிதத்தைப் பிற உயிர்களினின்றும் அவனிடம் விஞ்சி நிற்பதாகும்.

இயற்கையினை அறிவதும் நம் இயல்பின் (சுயத்தின் ) அது ஆன்மாவாக இருப்பதே என்றும் , நம் சாதாரண உடல் , அறிவு சித்தம் என்பவற்றைக் கொண்டே அறியத்தக்கதாய் அமைந்துள்ளது என ஞானத்தைக் கொண்டு அறிந்து சொன்ன பண்டைய சித்தர்கள் , மகா புருஷர்கள் . 

 இவர்களுடன்  இறைவனும், தம் பங்கிற்கு அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் இறங்கிவந்து அவதாரப் புருஷர்களாய்  பாத்திரம் ஏற்று இப்பாரத பூமியினை , பவித்திரமான ஞான பூமியாக்கி மெய்ஞானச் சுடரை உணர, அதில் கலக்க, பல்வேறு முறைகள் இருப்பதால்  அவரவர்க்கு ஏற்ற மார்க்கத்தை மேற்கொண்டாலுமே உண்மையினை தொட்டு விடலாம் என்று வேதம் அதன் மூலத்தால் வெளிப்படுத்துகிறது 

தொடரும்
  



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment