Tuesday, June 1, 2010

இந்த விளக்கம் எதற்காக ?

அன்புள்ள வலைப் பதிவுலக மெய்யன்பர்களுக்கு

ஸ்வார்த்தம் சத் சங்கத்தின்  குரு மகாராஜ் பதஞ்சலி மகரிஷி அவர்களின் வாழ்த்துக்களும் , வணக்கங்களும் வயதுக்கேற்றபடி.


                                                                               

நமது வலைப் பதிவின்  42 வது  கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.  மனித உடல் , உள்ளம் , ஆன்மாவின் நலம் நாட வேண்டும்  என்பதே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் முக்கிய நோக்கம். அந்த நோக்கம் ஆனது சீராக நிறைவேறி கொண்டிருக்கிறது என்பதை நம்புகிறோம். அதில் மகிழ்வடைகின்றோம்.

இறைவனின் கூறு எனப்படும் மனிதன் தன் சுயத்தை மீட்டெடுக்க உயர்ந்த பண்புகளை கைக் கொள்வதன் மூலம் மற்றும் கடைபிடிப்பதன் மூலம் ஒவ்வொரு மனித உயிரும் தன் சுயத்தினை அறிந்து கொள்ள முடியும் என்ற கோட்பாட்டின் படி ஸ்வார்த்தம் சத் சங்கம் பல்வேறு தலைப்புகளை கட்டுரை வெளியிடுக்க் கொண்டிருக்கிறது. இன்னும் வெளியிடும் என்ற வகையில் ,



கொல்லாமை, புலால் மறுத்தல் பற்றிய கட்டுரைக்கு கிடைத்த வரவேற்புகள் எங்களை மகிழ்விக்கின்றன.  அதே சமயத்தில் மேற்குறித்த தலைப்பின் கீழ் பொது அறிவிப்பினை வெளியிடுகிறோம். 


மதங்கள் பல்வேறு வகையான ஓளி உமிழ் விளக்குகளாக மனிதத்தின் அறியாமை இருளைப் போக்கி மனிதம் உயர்ந்த தன்மைகளை என்றும் மாறாது கால வரையின்றி காத்து வருபவைகளாகும்.



மதங்கள் ஒரு போதும் மனிதர்களை பிரிப்பதில்லை . மாறாக ஒன்று சேர்க்கும் புனிதப் பணியினையே மேற்கொள்கின்றன என்று அனைத்து அருளாளர்களும் கூறியுள்ளனர்.


                     பொங்கு பல சமயம் எனும் நதிகள் யாவும்
                    புகுந்து கலங்கிட நிறைவாய் பொங்கி ஓங்கு 
                     கங்கு கரை காணாத கடலே 


என்று அருளின் வள்ளல்கள் கூற்றினை ஏற்று அவர்கள் வழி நடப்பதே மாந்தர்களின்  ஒரு வகை புரிந்துணர்வு ஒப்பந்தம்.


மதங்கள் இறைத் தன்மையினை வெளிப் படுத்தி அதில் மனிதத்தை அமிழ்த்தி  அழகு செய்கின்றன.


மதங்கள் இறைத் தூதர்கள் மூலம் அறியப் பட்டவைகளாகும். இறைவனின் எல்லையற்ற கருணையினை அவர்கள் மூலம் மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன.



மதங்கள் யாவும் , அன்பு , கருணை , அஹிம்சை , அறம்  , பண்பு  இந்த ஐந்தின்  பெருக்கத்தை அடிப்படையாக கொண்டு விளங்கும் இறைவனின் முகவரியாக திகழ்கின்றன.



மதங்களில் அஹிம்சை என்ற சொல்லின் ஆழம் பற்றி அறிந்து கொள்ளும்போது அங்கே கொல்லாமை என்ற பண்பு  பொதுவாக அதிகமாகவே அடையாளம் காட்டப் படுகிறது. என்பது  எமது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் தனிப்பட்ட முக்கிய கருத்தேயின்றி  எந்த மதத்தினரையும்  இந்த விஷயத்தில் ஒரு போதும் அவர்களின் மதக் கோட்பாடுகளை விமர்சிப்பது அல்ல என்பது  திண்ணம். 




ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் பிரிவுகளில் ஒன்றானதும் முக்கியத்துவம் பெறுவதுமான மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்  மத வேறுபாடுகளை கடந்து பொதுவான மனித உடல், உள்ளம் இரண்டின் மேம்பாடுகளை பெரிதும் சிந்தித்து அதிசியதக்க வகையில்  அவ்விரண்டில் மாபெரும் சக்திகளை அவற்றின் மேம்பாடுகளை சிந்தித்து  அதற்கான வழிமுறைகளை  மகரிஷி பதஞ்சலி முனிவர் கூறியுள்ள  யோக வழியினை அடிப்பையாக கொண்டும் , குரு பரம்பரை மற்றும் சித்தர்களின் உபதேசங்களின்  அடித்தடங்களை  பின்பற்றியதாகவும்  மன விஞ்ஞான  வெளிப்பாடுகளை  கொண்டதாகவும் விளங்குகிறது எனலாம்.



புலால் மறுப்புக் கொள்கையினை எவரிடமும் திணிப்பது எம் நோக்கம் அல்ல. 


 சைவ உணவுக் கோட்பாட்டினை ஆதரிக்கும் நூல்களின் செய்திகளின் சில ஆதாரங்கள் இந்த கட்டுரையில் சேர்க்கப்பட்டிருந்தது.
                                                                 அந்த தகவல்களில் முரண்பாடோ தவறோ இருப்பதாக  கருதுபவர்களின் விமர்சனங்களை எங்களுக்கு அறிவுறுத்தும் அல்லது தெளிவுப் படுத்தும் செய்திகளாக தருவதை அன்புடன் ஏற்று  அந்த உண்மைகளையும்  மையப்படுத்துவோம் என்பதில்  இருவேறு கருத்துக்கள் இல்லை.

மதக்கருத்துக்கள் -விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள்  எவ்விதமாக இருப்பினும்


- மனித உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற ஒரு செயலும் முடிவுகளும் மனிதன் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றே. 


ஆன்மா மட்டுமல்ல , ஆன்மாவின் நலம் நாடும் கொள்கைகளும் எக்காலத்தும் அழியாது மனிதருள் நிலை பெற்று ஓங்கும்  என்பதைச் சொல்லாமல் நிரூபித்துக் கொண்டிருக்கும் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் இந்த கட்டுரையினை படித்து பின்னூட்டம் இட்டுக் கொண்டிருக்கும், இடப் போகும் அந்த நல்ல உள்ளங்களை  அவர்களின் சீரடி போற்றி வணங்கும்  
                                                                                                    
                                       அடியார்க்கு அடியார்கள்
                                          (ஸ்வார்த்தம் சத்சங்கம் )


(தேடலும் , கொள்கைகளும் , விளக்கங்களும் தொடரும் )



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment