Thursday, June 18, 2009

குருவணக்கம்

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

குருவணக்கம் 

குருவழியே ஆதி ஆதி 
குருமொழியே வேதம் வேதம் 
குருவிழியே தீபம் தீபம் 
குருபதமே காப்பு காப்பு. 

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மை யாகும்.

“அத யோகானுசானம்” என்று முதல் சூத்திரம் துவங்கி

புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி -ப்ரஸவ: கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசிதி-சுக்தே : இதி”

என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார்.

இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும்.

ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment