Pages

Thursday, June 25, 2009

மணிபூரகம்

மணிபூரகம் 
  'தொப்புள்' என்றும் 'நாபி' என்றும் குறிக்கப்படும் கேந்திரம் முழுவதும் பரவி நிற்பதும், முதுகுத்தண்டின் கீழிருந்து மேலாக மூன்றாவது ஆதார இணைப்புபாதையாகும். 

இதன் உருவம் வட்டமும், வட்டத்தினுள் அமைந்த மேல்நோக்கிய இரு கொம்புவடிவ பிறைச்சந்திரன் உருவத்தை கொண்டதாகும். 

வட்டத்தினுள் வெளியே தொட்டபடி பத்து தளங்கள் கொண்ட (இதழ்கள்) ஒவ்வொன்றிலும் (டட, ணத , தத, தந , பப) என்ற பத்து அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதுவே பத்து யோக நாடிகளாய் மிளிருகின்றது. 

பஞ்சாக்ஷரத்தின் இரண்டாம் எழுத்தின் "ம " என்ற சப்த பரிமாண எழுச்சியின் பிறப்பிடமாகின்றது. அப்பு எனப்படும் நீர் தததுவமாகும். 

இப்பகுதி 1008நாடிகளின் பிறப்பிடமும் மூலாதானமும் ஆகும். 

நாபிகமலமென்றும், அதன் வேராக இருப்பதும் ஆகும். 
கீழ் மூன்று, மேல் மூன்று, என ஆறு ஆதாரங்களை பிரிப்பதில் 
( மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிபூரகம்) இம்மூன்றும் கீழ் ஆதாரங்களாக திகழ்கிறது. 

அத்துடன் அபானன் என்ற மலக்கற்று இந்த கீழ் மூன்று ஆதாரங்களையும் மையப்படுத்தி வியாபித்து நின்று கீழ்நோக்கி வெளியேறும் வாயு ஸ்தானங்கள் ஆகும். 

யோக சித்தி பெற அபானன் என்ற கீழ் நோக்கிய வாயுவை பிராணனுடன் 
(மேல் நோக்கி பயணிப்பது) கலந்து மேலேற்றுகையில் , குண்டலினி பயணத்தில் மேலெழச்செய்யும் யுக்தியின் பிரதான கிரியை ஆகும்.

2 comments:

  1. அருமையா இருக்கு, அட மெய்யாலுமே!
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

    ஓட்டும் போட்டாச்சு..

    ReplyDelete
  2. ovondrum alagaaga vivarikapadu kindrana.
    Vaalthukal.
    Padangalodu vilakathai taruvathu nandraaga ullathu.
    melum pala vilankangalukaaga kaathirukirom.

    ReplyDelete